இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் பொறுப்பேற்பு

நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

News image
Updated On :27 மே 2023, 6:53 am

DIN

நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த அ. அருண் தம்புராஜ் கடலூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராமநாதபுரம் ஆட்சியராக இருந்த ஜானி டாம் வர்கீஸ் நாகை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார். 

இந்த நிலையில், நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரலாற்று சிறப்புமிக்க நாகை மாவட்டத்துக்கு ஆட்சியராக பொறுப்பேற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு அரசின் அனைத்து அறிவிப்புகள் மற்றும் திட்டங்களும் பொதுமக்களிடம் சென்றடைவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.

அனைத்து துறை அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு பயனடையும் வகையில் கொண்டு செல்ல முழுமையான முயற்சிகள் எடுக்கப்படும். குடிநீர் திட்டங்கள், மீன்வளத் துறை திட்டங்கள், ஊரக வளர்ச்சித் துறை திட்டங்கள், முன்னேற விளையும் மாவட்ட திட்டங்கள் ஆகியவற்றிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். 

மாற்றுத் திறனாளிகள் துறை சார்ந்த திட்டங்கள் மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.