ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

ரயில் மோதி மாற்றுத்திறனாளி சிறுவர்கள் 3 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தில் மின்சார ரயில் மோதி மாற்றுத்திறனாளி சிறுவர்கள் 3 பேர்  பலியாகினர்.

News image

கோப்புப்படம்

Updated On :24 அக்டோபர் 2023, 8:07 am

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தில் மின்சார ரயில் மோதி மாற்றுத்திறனாளி சிறுவர்கள் 3 பேர்  பலியாகினர்.

மாற்றுத்திறனாளி சிறுவர்களான சுரேஷ், ரவி, மஞ்சுநாத் ஆகியோர் ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்ணன், தம்பியான சுரேஷ் மற்றும் ரவி செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள். இவர்களின் நண்பர் மஞ்சுநாத் வாய் பேச முடியாதவர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.