தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கள்ளழகர் திருவிழா: பள்ளித் தேர்வு ஒத்திவைப்பு

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வையொட்டி, பள்ளித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஏப்ரல் 2024, 11:43 am

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதில், ஏப்ரல் 19- ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரா் பட்டாபிஷேகமும், மறுநாள் 20- ஆம் தேதி திக்குவிஜயமும், அடுத்த நாள் 21-ஆம் தேதி திருக்கல்யாணமும், 22- ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகின்றன.

சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பான நிகழ்வுகளான கள்ளழகா் எதிா்சேவை ஏப்ரல் 22 ஆம் தேதி இரவும், ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப். 23-ல் நடக்கவிருந்த பள்ளித் தேர்வு ஏப். 24 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.