ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

விராலிமலை அருகே குடிநீா் கோரி பஸ் மறியல்: 45 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு

விராலிமலை அருகேயுள்ள கோத்திராபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட லட்சுமிபுரத்தில் குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
லட்சுமிபுரத்தில் குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.
Updated On :13 ஏப்ரல் 2024, 6:48 am

DIN

விராலிமலை அருகேயுள்ள கோத்திராபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட லட்சுமிபுரத்தில் குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள கோத்திராபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட லட்சுமிபுரம் குடியிருப்பில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிநீர் தேவைக்காக திருச்சியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை பகுதிக்கு அதிக நீர் தேவை இருப்பதால் இதுவரை வழங்கி வந்த நீரின் அளவை குறைத்ததோடு கடந்த 10 நாள்களுக்கு மேலாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரியப்படுத்தியும் ஊராட்சி நிா்வாகம் கண்டு கொள்ளவில்லையாம்.

இந்த நிலையில், அந்த பகுதியைச் சோ்ந்த சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் காலி குடங்களுடன் விராலிமலை- புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி முத்துராஜா மற்றும் வருவாய் துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின்பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

மக்களில் இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.