இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ரயில்வே துறையில் நிதிக் குறைப்பு: முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றம்!

தமிழகத்தில் ரயில்வே துறைக்கு போதுமான நிதி ஒதுக்குமாறு மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

News image
ஸ்டாலின் (கோப்புப் படம்)
Updated On :19 ஆகஸ்ட் 2024, 4:20 pm

DIN

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறை குறித்து முதல்வர் ஸ்டாலின் மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் புதிய ரயில் பாதைத் திட்டங்களுக்கு, இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே பட்ஜெட் வெளியிட்ட பிங்க் புக்கில் தெரிவிக்கபட்டதால் முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றம் அடைந்ததாகக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் புதிய ரயில் பாதைகள், இரட்டிப்புத் திட்டங்கள், பல்வேறு பயணிகள் வசதி திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, தெற்கு ரயில்வேக்கான நிதி, இடைக்கால வரவு-செலவுத் திட்டத்துடன், 2024 - 25 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தை ஒப்பிடும்போது, 976.1 கோடியிலிருந்து 301.3 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 674.8 கோடி நிதியைக் குறைப்பதன் மூலம் மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் பல முக்கிய திட்டங்களின் முன்னேற்றத்தை கடுமையாக பாதிப்படையும்.

இதேபோல், இரட்டிப்புத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு 2214.4 கோடியிலிருந்து 1928.8 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இரட்டிப்புத் திட்டங்களுக்கான நிதியில் 285.64 கோடி குறைக்கப்பட்டிருப்பது என்பது தேவையான முன்னேற்றங்களை மிகவும் மெதுவாக்கும்.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ரயில்வேயில் நிலுவையில் உள்ள முக்கிய வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். நிதி பற்றாக்குறை காரணமாக ரயில்வே திட்டங்களை மேலும் தாமதப்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார்.

நகரி-திண்டிவனம், திண்டிவனம்-ஜிஞ்சி-திருவண்ணாமலை, அத்திப்பட்டு-புதூர், ஈரோடு-பழனி, சென்னை-கடலூர் (மகாபலிபுரம் வழியாக), மதுரை-தூத்துக்குடி (அருப்புக்கோட்டை வழியாக), ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல புதிய ரயில் பாதை திட்டங்களையும், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டுமானத்தில் முன்னேற்றம், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையேயான நான்காவது வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை ஆய்வு தயாரித்தல், போத்தேரி மற்றும் கட்டங்குளத்தூர் ரயில் நிலையங்களில் போக்குவரத்து சுழற்சிப் பணிகள், உள்ளூர் ரயில் சேவைகளை அதிகரிப்பதன் மூலம் ஒவ்வொரு 5 முதல் 7 நிமிடங்களுக்கும் ஒரு ரயிலை இயக்குதல் குறித்தும் முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.