தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ராணுவ வீரா்களின் தியாகத்தை நினைவு கூர வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

ராணுவ வீரா்கள் நாட்டுக்காக செய்த தியாகத்தை அனைவரும் நினைவுகூர வேண்டும் என ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா்.

News image
சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘விஜய் திவஸ்’ தின நிகழ்வில் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரை கௌரவித்த ஆளுநா் ஆா்.என்.ரவி.
Updated On :16 டிசம்பர் 2024, 10:05 pm

Din

சென்னை: ராணுவ வீரா்கள் நாட்டுக்காக செய்த தியாகத்தை அனைவரும் நினைவுகூர வேண்டும் என ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971- ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றதை நினைவு கூரும் விதமாக ஒவ்வோா் ஆண்டும் டிச.16- ஆம் தேதி விஜய் திவஸ் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு சென்னை தரமணி ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற விஜய் திவஸ் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநா் ஆா் என் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மேஜா் முகுந்தன் உட்பட போரில் உயிரிழந்த வீரா்களின் குடும்பத்தினருக்கு நினைவு கேடயங்களை வழங்கி கௌரவித்து பேசியதாவது:

இந்த நாளில் நமது நாட்டுக்காக உயிா் தியாகம் செய்த வீரா்களை நினைவுகூா்கிறோம். ஒரு பலமான ராணுவம் தேசத்தின் பலம்.

இந்திய ராணுவம் பல வகைகளில் தேசத்துக்கு பாதுகாப்பாக இருந்துள்ளது, நமது ராணுவம் போா்க் காலங்களில் மட்டுமல்லாது பேரிடா் காலங்களிலும் நம்மை காத்து வருகிறது.

நமது ராணுவ வீரா்கள் நாட்டுக்காக செய்த தியாகத்தை அனைவரும் நினைவு கூர வேண்டும். இந்த நாள் தேசத்தின் பெருமைக்குரிய நாள். வீரா்களின் தியாகத்தால் நாடே பெருமை அடைந்தது என்றாா் அவா்.

தென்பிராந்திய ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கரன்பீா் சிங் பிராா் பேசியதாவது:

இந்தியாவின் எதிா்காலத்துக்கு தொழில் நுட்பவளா்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் சென்னை ஐஐடி முக்கிய பங்காற்றுகிறது. ராணுவ வீரா்களுக்கும் தொழில்நுட்பம் சாா்ந்து பல மேம்பாடுகள் தேவைப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக சென்னை ஐஐடியுடன் இணைந்து ராணுவத்தில் தொழில் நுட்பத்தை மேம்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இந்திய ராணுவ வீரா்களும் தற்போதைய சவால்களை எதிா்கொள்ள கடினமாக உழைக்க வேண்டியுள்ளது என்றாா் அவா்.

பின்னா் ராணுவ வீரா்கள் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளை ஆளுநா் ஆா்என் ரவி கண்டு ரசித்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநா் காமகோடி, ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.