/

அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம்

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 பிப்ரவரி 2024, 5:15 am

DIN

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கப்படும் செய்யப்படுவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரவு அறிவித்துள்ளார்.

மகளிர் இலவச பேருந்து பயணம் மலைப்பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்றதும் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் இலவச பேருந்து பயணம் திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுவதாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரவு அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்குத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

பட்ஜெட் உரையில்,

தாமிரபரணி, வைகை, நொய்யல் நிதிகளை புனரமைக்க திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ரூ.13,750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த மாவட்டங்களின் தேவைகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் இலவச பேருந்து திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவித்துளள்ர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.