வேளாண் துறைக்கான தமிழக அரசின் தனி பட்ஜெட் 4ஆவது முறையாக இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்...' என்ற திருக்குறளுடன் வேளாண் பட்ஜெட்டை வாசிக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்.
விவசாயிகள் வாழ்வாதாரத்தை வளத்தை நோக்கி இட்டுச்செல்லும் பட்ஜெட் இது: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
வேளாண்மையை வருவாய் ஈட்டக்கூடிய தொழிலாக மாற்றியவர் முதல்வர் மு.க. ஸ்டாலின்
வேளாண்மையை அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்வது முக்கியம்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
விளைபொருள்கள் அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர்
வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் வாடகைக்குப் பெற்று பயன்பெறும் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர்
கடந்த பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்திற்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தாவிக் குதிக்கும் குழந்தை போன்றது தற்போதைய பட்ஜெட்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 4,436 கோடி பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது: எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
தாவிக் குதிக்கும் குழந்தை போன்றது தற்போதைய பட்ஜெட்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
127 மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மண்ணுயிர் காப்போம் என்ற திட்டம் ரூ.206 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்: எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
மண்புழு உரத் தயாரிப்பை ஊக்குவிக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு
அமில நிலங்களை சீர்படுத்த ரூ. 22.5 கோடி ஒதுக்கீடு
2,482 ஊராட்சிகளுக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு; ரசாயன உரத்தின் பயன்பாட்டை குறைத்து மண் வளம் காக்க ரூ. 6.27 கோடி
வேளாண் காடுகள் திட்டம் மூலம் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் வழங்க ரூ.2 கோடி ஒதுக்கீடு
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் ரகங்கள் 1,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம்
ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெறும் வகையில் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு
ஆடாதொடா நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்த்திட ரூ. 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு
725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு. உயிர்ம வேளாண்மை மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 இலட்சம் நிதி ஒதுக்கீடு.
14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு!
தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு!
'மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்' மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு!
எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.
துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம்த்தின் மூலம் துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு..!
ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்!
ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு.
ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு.
புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு..!
புதிய பலா ரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு.
ஏற்றுமதிக்கு உகந்த வாழை உற்பத்தி செய்ய ரூ.12.73 கோடி நிதி ஒதுக்கீடு!
ஏற்றுமதிக்கு உகந்த மா ரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு.
சர்வதேச தோட்டக்கலை பண்ணை இயந்திரக் கண்காட்சி இவ்வாண்டு நடத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு!
தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகள் விவசாய நிலங்களில் அமைக்க மானியமும், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் செயல் விளக்கத் திடல்கள் அமைக்கவும் ரூ.27.50 கோடி நிதி ஒதுக்கீடு.
நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் திறனை மேம்படுத்த ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு!
பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்.
ரூ.3.64 கோடியில் வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த "தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம்" செயல்படுத்தப்படும்.
கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூ. 12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்!
2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும்.
விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு!
10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 லட்சம் ஒதுக்கீடு.
ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு!
பாரம்பரிய காய்கறி ரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும், ரூ.2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம்.
விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ. 9.40 கோடி நிதி ஒதுக்கீடு!
செங்காந்தள், மருந்து கூர்க்கன், அவுரி சென்னா, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
பேரிச்சைப் பழம் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 இலட்சம் ஒதுக்கீடு!
மரவள்ளிப்பயிரில் மாவுபூச்சியை கட்டுப்படுத்த ரூ.1 கோடி பின்னேற்பு மானியம்.
ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு.
புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு!
ரூ. 16, 500 கோடிக்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பட்ஜெட்டை 2 மணிநேரம் வாசித்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்