கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுச்சேரியில் ஜன.22ஆம் தேதி பொதுவிடுமுறை

அயோத்தி ராமர் கோயில் மூலவர் சிலை பிரதிஷ்டை விழாவான ஜனவரி 22ஆம் தேதி புதுச்சேரிக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஜனவரி 2024, 10:20 am

DIN


அயோத்தி ராமர் கோயில் மூலவர் சிலை பிரதிஷ்டை விழாவான ஜனவரி 22ஆம் தேதி புதுச்சேரிக்கு பொதுவிடுமுறை அறிவித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் விழாவில் பொதுமக்கள் பங்கேற்க வசதியாக, பொதுவிடுமறை அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார். ஏற்கனவே குஜராத் அரசும், அன்றைய தினத்தில் பொதுவிடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழாதினமான திங்கள்கிழமையன்று மத்திய அரசு அலுவலகங்களுக்கு பிற்பகல் 2.30 மணிவரை அரைநாள் விடுமுறை அறிவித்து மத்திய பணியாளா் நல அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அன்றைய தினம் பொதுத் துறை வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் அரைநாள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவரான குழந்தை ராமா் சிலை வரும் திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் ‘பிராண பிரதிஷ்டை’ செய்யப்பட உள்ளது.

இந்த வரலாற்று நிகழ்வில் பிரதமா் மோடி உள்பட 8,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்க உள்ளனா். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘பிரதிஷ்டை நாளான திங்கள்கிழமையன்று கொண்டாட்டங்களில் மத்திய அரசுப் பணியாளா்களும் பங்கேற்பதற்கு ஏதுவாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை அமைப்புகளுக்கு திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிவரை அரைநாள் விடுமுறை வழங்கப்படுகிறது’ என மத்திய பணியாளா் நல அமைச்சகம் நேற்று அறிவித்திருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.