கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆலங்குளத்தில் காங்கிரஸார் திடீர் சாலை மறியல்

தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுத்த போலீசாரை கண்டித்து ஆலங்குளத்தில் காங்கிரசார் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

News image
Updated On :26 ஜனவரி 2024, 6:05 am

DIN

ஆலங்குளம்: தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுத்த போலீசாரை கண்டித்து ஆலங்குளத்தில் காங்கிரசார் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

குடியரசு நாளையொட்டி, தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள காமராஜர் சிலை அருகில் தேசியக் கொடி ஏற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர். ஆண்டுதோறும் இதே இடத்தில் கொடி ஏற்றப்பட்டு வரும் நிலையில், உரிய அனுமதி பெறவில்லை என்ற காரணத்தை கூறி காவல்துறையினர் அந்த கொடி கம்பத்தை அகற்றிச் சென்று விட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த காங்கிரஸார் தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுத்த போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.எனினும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. 

இதையடுத்து தேசிய தலைவர் சிலை முன்னால் தேசியக்கொடி ஏற்ற அனுமதி கிடையாதா என்று ஆத்திரமடைந்த காங்கிரஸார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு தலைமையில் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் திருநெல்வேலி தென்காசி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

தகவல் அறிந்து வந்த போலீஸார் சமரச பேச்சில் ஈடுபட்டனர். அப்போது அகற்றப்பட்ட கொடிக்கம்பம் மீண்டும் காங்கிரஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து காமராஜர் சிலை முன்பு தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ்,ஓபிசி அணி மாநில நிர்வாகி ஞானபிரகாஷ், அருணாசலம், லெனின், லிவிங்ஸ்டன், துரைப்பாண்டி, ஏசுராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.