தென்காசி அருகே சிமெண்ட் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிகொண்ட விபத்தில் 6 பேர் பலியாகினர்.
கொல்லம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புன்னையாபுரம் அருகே ராஜபாளையத்தில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த சிமெண்ட் லாரியும் காரும் நேருக்குநேர் மோதியது.
இந்த விபத்தில் குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் சென்று கொண்டிருந்த ஆறு பேரும் பலியாகினர். மேலும் 2 பேர் பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: நடுவானில் விமானத்தில் ரகளை: இளைஞா் கைது
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.