இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக அண்ணாமலை மானநஷ்ட வழக்கு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் அண்ணாமலையை தொடர்புபடுத்தி பேசியதற்கு எதிராக வழக்கு.

News image
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. (கோப்புப்படம்)
Updated On :10 ஜூலை 2024, 6:09 am

DIN

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் அண்ணாமலையை தொடர்புபடுத்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக ரூ. ஒரு கோடி மான நஷ்ட தொகை கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு செய்தியாளர்களுடன் அண்ணாமலை பேசியதாவது:

“ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து பெறப்படும் மானநஷ்ட தொகையை கள்ளக்குறிச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.

என்னை சின்னப் பையன் என்று கூறிய ஆர் எஸ் பாரதி இப்போது இந்த வழக்கின் மூலம் நான் யார் என்பதை புரிந்து கொள்வார். கண்டிப்பாக அவர் தண்டிக்கப்படுவார். நாய்கூட பிஏ படிக்கிறது என்று அவதூறாக அவர் பேசியதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.