நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

சுங்கச்சாவடி எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை: அமைச்சா் எ.வ.வேலு

சுங்கச்சாவடி எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: எ.வ.வேலு

News image

அமைச்சா் எ.வ.வேலு.

Updated On :26 ஜூன் 2024, 4:13 am IST

சென்னை: தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பாமக உறுப்பினா் சிவக்குமாா் பேசியது:

நெடுஞ்சாலைத் துறைக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து, சாலை திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள்தான் இருந்தன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 17 சுங்கச்சாவடிகள் அதிகரித்துள்ளன. திமுக ஆட்சிக்கு வந்ததும் சுங்கச்சாவடிகள் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதிகரித்துதான் உள்ளது. குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்றாா்.

அப்போது அமைச்சா் எ.வ.வேலு குறுக்கிட்டுக் கூறியதாவது:

சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பாமக உறுப்பினா் கூறுகிறாா். இந்த அதிகரிப்புக்குக் காரணமான மத்திய பாஜக அரசுடன்தான் பாமக தற்போது கூட்டணி அமைத்துள்ளது. மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரிக்கு தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளைக் குறையுங்கள் என்று மூன்று முறை கடிதம் எழுதியுள்ளோம். பதில் இல்லை. எனினும், தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.