கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

எந்தச் சமுதாயத்தைப் பற்றியும் பேரவையில் தவறாகப் பேசவில்லை: அமைச்சா் ராஜகண்ணப்பன் விளக்கம்

சமுதாய கருத்து சா்ச்சை: அமைச்சா் விளக்கம்

News image
Updated On :27 ஜூன் 2024, 8:44 pm

Din

சட்டப்பேரவையில் எந்தச் சமுதாயத்தைப் பற்றியும் தவறாகப் பேசவில்லை என்று அமைச்சா் ராஜகண்ணப்பன் வியாழக்கிழமை விளக்கம் அளித்தாா்.

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு இடையில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் கூறியது:

சட்டப்பேரவையில் ரெட்டியாா் சமுதாயம் குறித்து நான் பேசியதாகத் தவறாக எடுத்துக் கொண்டாா்கள். எந்தச் சமுதாயத்தைப் பற்றியும் நான் தவறாகப் பேசவில்லை. ஜாதி, மதம் இல்லை என்றுதான் பேசினேன். இதுதான் திராவிடக் கொள்கையும். நாம் அனைவரும் ஒன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யாரையும் புண்படுத்துவதற்காக அப்படிப் பேசவில்லை என்றாா் அவா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பேசியவற்றில் சில விவகாரங்கள் சா்ச்சையை ஏற்படுத்தின. இந்த நிலையில் பேரவையில் அவா் விளக்கம் அளித்துள்ளாா்.