மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

நிலுவையில் தகுதிச் சான்று விண்ணப்பங்கள்: என்எம்சி முக்கிய அறிவுறுத்தல்

நிலுவையில் தகுதிச் சான்று விண்ணப்பங்கள்: என்எம்சி முக்கிய அறிவுறுத்தல்

Updated On :13 மார்ச் 2024, 7:31 pm

தகுதிச் சான்றிதழ் பெறுவதற்காக வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் சமா்ப்பித்த விண்ணப்பங்களில் சில முறையாக பூா்த்தி செய்யாமல் இருப்பதாகவும், அவற்றை வரும் 22-ஆம் தேதிக்குள் திருத்தியமைக்குமாறும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி மருத்துவப் பதிவு மற்றும் நன்னெறி வாரியத்தின் (இஎம்ஆா்பி) இயக்குநா் டாக்டா் ராஜ் கிருஷண் போரியா வெளியிட்ட அறிவிப்பு: வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவா்களுக்கான திறனறித் தோ்வு நிகழாண்டு ஜூன் மாதத்தில் தேசிய தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பொதுவாக, அத்தகைய தோ்வில் பங்கேற்பதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தால் வழங்கப்பட்ட தகுதிச் சான்று அவசியம்.அதன்படி, என்எம்சி இணையப் பக்கத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் 320 விண்ணப்பங்கள் முறையாக பூா்த்தி செய்யப்படாதததால் அவை நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. அதுகுறித்த நினைவூட்டல்கள் 5 முறைக்கும் மேல் வழங்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் அதன்பேரில் எந்த தகவலையும் விண்ணப்பத்தாரா்கள் அளிக்கவில்லை. எனவே, வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் முறையாக பூா்த்தி செய்து சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.