ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பாதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான தேர்வுகளை ஏப்ரம் 12 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 2 ஆம் தேதியில் தொடங்கி ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், ஏப்ரல் 13 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தவிடப்பட்டுள்ளது.
முதல்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஏப். 12-க்குள் பள்ளித் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.