தூத்துக்குடியில் கனிமொழி வேட்புமனு தாக்கல்

திமுக பொதுச் செயலாளர் கனிமொழிக்கு வாக்கு சேகரித்து காலைமுதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்.
தூத்துக்குடியில் கனிமொழி வேட்புமனு தாக்கல்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கனிமொழி செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் திமுக துணை பொதுச்செயலர் கனிமொழி போட்டியிடுகிறார்.

தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலைமுதல் கனிமொழிக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்து வருகிறார்.

தூத்துக்குடியில் கனிமொழி வேட்புமனு தாக்கல்
தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் லட்சுமிபதியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து அதிமுக ஆர்.சிவசாமி, தமாகா விஜயசீலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com