தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கனிமொழி செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் திமுக துணை பொதுச்செயலர் கனிமொழி போட்டியிடுகிறார்.
தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலைமுதல் கனிமொழிக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் லட்சுமிபதியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து அதிமுக ஆர்.சிவசாமி, தமாகா விஜயசீலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.