பிளஸ் 1 பொதுத் தேர்வு: மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் செப். 16-ல் வெளியீடு
பிளஸ் 1 பொதுத் தேர்வு: மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் செப். 16-ல் வெளியீடு

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

தமிழகத்தில் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 6) வெளியாகவுள்ளன.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் மாதம் நடைபெற்றது. சுமாா் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தோ்வு எழுதினா். விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 2-இல் தொடங்கி 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது.

தோ்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ள ஏதுவாக அவா்கள் பள்ளிகளில் அளித்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் வழக்கம்போல அனுப்பி வைக்கப்படவுள்ளது. மேலும், இணையதளங்களிலும் மாணவா்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தோ்வு முடிவுகளை அறியலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com