சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

மழை பெய்ய வேண்டி சிவகங்கையில் இஸ்லாமியா்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

News image
மழை பெய்ய வேண்டி சிவகங்கையில் சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர்.
Updated On :5 மே 2024, 8:08 am

DIN

சிவகங்கை: சிவகங்கை பகுதியில் நிலவும் கடும் வறட்சியை போக்கவும், மழை பெய்ய வேண்டியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் குளங்களிலும், தண்ணீர் இல்லாமல், வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும், கால்நடைகளும் குடிநீர் கிடைக்காமல் தவித்து அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக சிவகங்கையில் வெயிலின் தாக்கம் அளவுக்கு அதிகமாக உள்ளதால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மழை பெய்தால் மட்டும் அனைவரும் கோடையிலிருந்து மீள முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மழை பெய்ய வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை கிளையில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் மழை வேண்டி ஆண்கள் மேல்சட்டைகளை திருப்பிப் போட்டும், கைகளை நீட்டியவாறு சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

சிவகங்கை மாவட்ட தலைவர் ரபீக் முகமது தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், மாவட்ட பொருளாளர் முகமது இஸ்மாயில், மாவட்டத் துணைச் செயலாளர் சிஹாபுதீன், மாவட்ட மாணவரணி செயலாளர் வரிசை முகமது, சிவகங்கை கிளை தலைவர் ஷாஜகான், செயலாளர் ராஜா முகமது, பொருளாளர் உமர், துணை தலைவர் சாகுல், துணைச்செயலாளர் பர்வீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.