வேங்கைவயல் விவகாரம்: ஆயுதப்படை காவலரிடம் 4 மணி நேரமாக விசாரணை!

வேங்கைவயல் விவகாரத்தில் ஆயுதப்படை காவலரிடம் 4 மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
வேங்கைவயல் விவகாரம்: ஆயுதப்படை காவலரிடம் 4 மணி நேரமாக விசாரணை!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், அதே ஊரைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலரிடம் சிபிசிஐடி போலீஸார் வியாழக்கிழமை காலை முதல் 4 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை நிஜாம் குடியிருப்பிலுள்ள சிபி சிஐடி அலுவலகத்தில், தஞ்சை துணைக் காவல் கண்காணிப்பாளர் கல்பனா தத் தலைமையிலான போலீஸார் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

வேங்கைவயல் விவகாரம்: ஆயுதப்படை காவலரிடம் 4 மணி நேரமாக விசாரணை!
ரசாயன தொழிற்சாலையில் வெடிவிபத்து: 6 தொழிலாளர்கள் பலி!

வழக்கமாக விசாரணை நடத்திட 161 சிஆர்பிசி சட்டப் பிரிவின் கீழ் அழைப்பாணை அனுப்பும் போலீஸார் இந்த முறை 41 ஏ பிரிவின் கீழ் அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தி வருவது பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com