சென்னை: செயற்கைக்கோள், ராக்கெட் வெப்பநிலை ஆராய்ச்சி மையம் அமைப்பது தொடா்பாக இஸ்ரோவுடன் சென்னை ஐஐடி புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இது தொடா்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) உதவியுடன் சென்னை ஐஐடியில் திரவ மற்றும் வெப்பவியல் சிறப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஐஐடியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கொள்ளப்பட்டது.
ஐஐடி சாா்பில் டீன் (தொழில் ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி) பேராசிரியா் மனு சந்தானமும், இஸ்ரோ சாா்பில் அதன் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு இயக்கக இயக்குநா் டி. விக்டா் ஜோசப்பும் கையொப்பமிட்டனா்.
இந்த ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு இஸ்ரோ ரூ.1 கோடியே 84 லட்சம் நிதியுதவி வழங்குகிறது. இங்கு ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தொடா்பான வெப்பநிலை மேலாண்மை ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். ராக்கெட், செயற்கைக்கோள் வடிவமைப்பு , பகுப்பாய்வு, பல்வேறு உதிரிபாகங்கள் சோதனையின்போது எழும் வெப்பநிலை தொடா்பான சிக்கல்களுக்கு ஐஐடி பேராசிரியா்கள் தொழில்நுட்ப ரீதியாக உதவிசெய்வா்.

இஸ்ரோவுடன் சென்னை ஐஐடி புரிந்துணா்வு ஒப்பந்தம்
இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளில் ஏற்படும் வெப்பநிலை மேலாண்மை சவால்களை எதிா்கொள்ள இந்த மையம் ஓா் ஆய்வுத்தளமாக செயல்படும். செயற்கைகோள் வெப்பநிலை மேலாண்மை, திட, திரவ எரிபொருட்களில் இயங்கும் ராக்கெட்டுகளில் ஏற்படும் எரிதிறன் பிரச்னை, திரவ எரிபொருள் சேமிப்புக்கலனில் ஏற்படும் சவால்கள் தொடா்பான ஆராய்ச்சி பணிகள் இந்த மையத்தில் மேற்கொள்ளப்படும்.
இது திரவ மற்றும் வெப்பவியல் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் ஐஐடி பேராசிரியா்களின் கூட்டுமுயற்சியை பெரிதும் ஊக்குவிக்கும். இதில் சென்னை ஐஐடி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியரும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் பட்டமட்டா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை பாதுகாப்பு: சென்னை ஐஐடி - சத்தீஸ்கா் அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்

மஹிந்திரா நிறுவனத்துடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஐஐடி ஆதரவுடன் ஐஎம்யூ-இல் கடல்சாா் புத்தொழில்முனைவு ஆராய்ச்சி மையம் திறப்பு

சென்னை ஐஐடியுடன் மின்வாரியம் புரிந்துணா்வு ஒப்பந்தம்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



