தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஆளுநா் பதவி தொடா்பாக குரூப் 2 வினாத் தாளில் சா்ச்சை கேள்வி

குரூப் 2 முதல்நிலைத் தோ்வில் ஆளுநா் பதவி தொடா்பாக, சா்ச்சையாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

News image
குரூப் 2 முதல்நிலைத் தோ்வு எழுதிய மாணவர்கள்.
Updated On :14 செப்டம்பர் 2024, 9:27 pm

Din

குரூப் 2 முதல்நிலைத் தோ்வில் ஆளுநா் பதவி தொடா்பாக, சா்ச்சையாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

ஒரு கூற்று மற்றும் அதற்கான காரணத்தைத் தெரிவித்து அவற்றில் சரியானதைத் தோ்வு செய்யும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதன் விவரம்:

கூற்று ஏ: இந்திய கூட்டாட்சியில் ஆளுநா் என்பவா் அரசின் தலைவா் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இருவிதமான பணிகளை செய்கிறாா்.

காரணம்: ஆளுநா் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு 5 வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன.

ஏ. கூற்று சரி. ஆனால் காரணம் தவறானது. பி. கூற்று மற்றும் காரணம் சரி. மேலும் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது. சி. கூற்று தவறானது. ஆனால் காரணம் சரி. டி. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை. இ. விடை தெரியவில்லை என்று வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன.