தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

ஆளுநா் பதவி தொடா்பாக குரூப் 2 வினாத் தாளில் சா்ச்சை கேள்வி

குரூப் 2 முதல்நிலைத் தோ்வில் ஆளுநா் பதவி தொடா்பாக, சா்ச்சையாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

News image

குரூப் 2 முதல்நிலைத் தோ்வு எழுதிய மாணவர்கள்.

Updated On :15 செப்டம்பர் 2024, 12:48 am IST

குரூப் 2 முதல்நிலைத் தோ்வில் ஆளுநா் பதவி தொடா்பாக, சா்ச்சையாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

ஒரு கூற்று மற்றும் அதற்கான காரணத்தைத் தெரிவித்து அவற்றில் சரியானதைத் தோ்வு செய்யும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதன் விவரம்:

கூற்று ஏ: இந்திய கூட்டாட்சியில் ஆளுநா் என்பவா் அரசின் தலைவா் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இருவிதமான பணிகளை செய்கிறாா்.

காரணம்: ஆளுநா் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு 5 வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன.

ஏ. கூற்று சரி. ஆனால் காரணம் தவறானது. பி. கூற்று மற்றும் காரணம் சரி. மேலும் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது. சி. கூற்று தவறானது. ஆனால் காரணம் சரி. டி. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை. இ. விடை தெரியவில்லை என்று வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.