தமிழகத்தில் வெயிலும் அதிகரிக்கும் மழையும் பெய்யும்!

தமிழகத்தில் மழை வெயில் குறித்து வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது என்று தெரிந்துக்கொள்வோம்..
சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் வெயிலும் அதிகரிக்கும் அதேசமயம் 2 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் வெயில் கொளுத்திவந்த நிலையில், மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழையும் பெய்து வருகின்றது. இரண்டு நாள்களாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்து, இதமான காலநிலை நிலவி வருகின்றது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப். 25 - அக். 1) வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு (செப்.25, செப்.26) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையை பொருத்தவரை..

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்கள்..

இன்று மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் இந்த நாளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com