எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

தர்பூசணி வாங்கலாமா? கூடாதா? வெடித்தது சர்ச்சை

தர்பூசணியில் ரசாயனம் கலக்கப்படுவதாக வந்த விடியோக்களை எதிர்த்து விவசாயிகளும் வியாபாரிகளும் போராட்டம்

News image

தர்பூசணி - ENS

Updated On :3 ஏப்ரல் 2025, 6:37 pm IST

தர்பூசணி தொடர்பான சர்ச்சை இன்று பேசுபொருளாகியிருக்கிறது. ஒருபக்கம் உணவுத் துறை அதிகாரிகளின் தகவலால் தர்பூசணி விற்பனை குறைந்ததாக விவசாயிகளும் வியாபாரிகளும் போராட்டத்தில் ஈடுபட, ரசாயன தர்பூசணி குறித்து தாங்கள் எதுவும் சொல்லவில்லை என்று உணவுத் துறை அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று, தர்பூசணி பழத்தை சாலையில் போட்டு உடைத்து அதனை சாப்பிட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுபோல ரசாயனம் கலந்த தர்பூசணிகள் விற்பனைக்கு வருவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு உணவுத் துறை அதிகாரிகள் விழிப்புணர்வு விடியோ வெளியிட்டதால் விற்பனை குறைந்ததாகவும், விலை வீழ்ச்சியடைந்து நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ரசாயனம் கலந்த பழங்கள் குறித்து தாங்கள் எதுவும் கூறவில்லை என்றும், மக்கள் அச்சமின்றி தர்பூசணி பழங்களை வாங்கிச் சாப்பிடலாம் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சதீஷ் குமார், தர்பூசணியை சாப்பிட்டதால் வாயப்புண் வந்ததாகப் புகார் வந்ததால், பல்வேறு இடங்களில் சோதனை செய்தோம். ஆனால், இதுவரை எனது ஆய்வில், ரசாயனக் கலப்பு இருந்த தர்பூசணியை பார்க்கவில்லை. சென்னையில் அதுபோன்ற தர்பூசணி விற்கப்படவும் இல்லை.

உணவுப் பாதுகாப்புத் துறை இணையதளத்தில் ரசாயனம் கலந்த தர்பூசணி குறித்து விழிப்புணர்வு விடியோதான் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் இதுவரை ரசாயனம் கலந்த தர்பூசணி கண்டெடுக்கப்படவில்லை.

அதுபோல விவசாயிகளுக்கு எதிராக எதையும் செய்யவில்லை. மக்கள் அச்சமின்றி தர்பூசணி சாப்பிடலாம் என்று சதீஷ் குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதுபோல, பல்வேறு இடங்களிலும் சோதனை செய்து கெட்டுப்போனது, எலி கடித்தவற்றைத்தான் கண்டுபிடித்து அழித்துள்ளோம் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.