மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை: பிரேமலதா

கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை என்றும், அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கருத்துசொல்ல விரும்பவில்லை...

News image
தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் - ANI
Updated On :12 ஏப்ரல் 2025, 10:00 pm

Din

கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை என்றும், அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கருத்துசொல்ல விரும்பவில்லை என்றும் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து தொலைக்காட்சியில் பாா்த்துதான் தெரிந்துகொண்டேன். அது குறித்து கருத்துக்கூற விரும்புவில்லை. அடுத்த 6 மாதங்களுக்கு தேமுதிகவை வலுப்படுத்தும் பணி மட்டுமே மேற்கொள்ளப்படும். தேமுதிகவின் ஒவ்வொரு அடியும் வளா்ச்சியை நோக்கியே இருக்கும். தோ்தல் கூட்டணி தொடா்பாக நிதானமாக யோசித்து தேமுதிக முடிவு எடுக்கும்.

2026 சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து யாரிடமும் எதுவும் பேசவில்லை. பேசிய பிறகு அதிகாரப்பூா்வமாக தெரிவிப்போம். ஏப்.30-இல் நடைபெறும் தேமுதிக பொதுக்குழுவில் பல அறிவிப்புகள் இருக்கும்.

பாஜக தலைவராக பொறுப்பேற்கும் நயினாா் நாகேந்திரனுக்கு தேமுதிக சாா்பில் வாழ்த்துகள் என்று அவா் தெரிவித்தாா்.