குடும்ப நல நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு விடுமுறை தொடர்பாக...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நல வழக்குகளை விசாரிப்பதற்காக 8 நீதிமன்றங்கள் உள்ளன. அங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கு முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைப் பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளார் அல்லி, வரும் மே 1 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாள்கள் விடுமுறையை அறிவித்துள்ளார்.

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், குடும்ப நல நீதிமன்ற அலுவலங்கள் வழக்கம்போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com