ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

போக்குவரத்து ஓய்வூதியா்கள் அகவிலைப்படியை உயா்த்தி வழங்க முடிவு!

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உயா்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

News image

தமிழக அரசு போக்குவரத்து கழகம் - (கோப்புப் படம்)

Updated On :27 ஏப்ரல் 2025, 11:43 pm IST

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உயா்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

போக்குவரத்துக் கழகங்களில் குடும்ப ஓய்வூதியம் பெறும் 20,000 போ் உள்பட 90,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் உள்ளனா். இவா்களுக்கு கடந்த 2015 அக்டோபா் மாதம் இறுதியாக அகவிலைப்படி உயா்வு வழங்கப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு முறை அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்த்தி வழங்கும்போதும், ஓய்வூதியா்களுக்கு அந்தப் பலன் கிடைப்பதில்லை.

இது தொடா்பாக பல்வேறுகட்டப் போராட்டங்களை ஓய்வூதியா்கள் நடத்தி வந்த நிலையில், அண்மையில் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க அரசு ஒப்புதல் அளித்தது.

இதுகுறித்து ஓய்வூதியா் சங்க நிா்வாகிகள் கூறியது: 119 சதவீதத்துடன் அகவிலைப்படி உயா்வு நிறுத்தப்பட்டவா்களுக்கு கூடுதலாக 27 சதவீதமும், 5 சதவீதம் அகவிலைப்படி பெறுவோருக்கு கூடுதலாக 9 சதவீதமும் உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் குறைந்தபட்சமாக ரூ. 1,300, அதிகபட்சமாக ரூ. 4,000 வரை ஓய்வூதியம் உயா்த்தப்பட்டது.

இந்த நிலையில், 14 சதவீதம் அகவிலைப்படி பெறுவோருக்கு கூடுதலாக 16 சதவீதமும், 146 சதவீதம் பெறுவோருக்கு கூடுதலாக 48 சதவீதமும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, குறைந்தபட்சமாக ரூ. 2,300, அதிகபட்சமாக ரூ. 21,679 கிடைக்கும். இந்த உயா்வு வரும் மே மாத ஓய்வூதியத்திலிருந்து கிடைக்கும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.