அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2025, 8:51 pm

தினமணி செய்திச் சேவை

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக் கடை நடத்தி வருகிறாா். சரவணன், தியாகராய நகா் உஸ்மான் சாலையில் நடந்து சென்றபோது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி 4 பெண்கள், சரவணனின் கவனத்தை திசை திருப்பி, அவரது பாக்கெட்டில் இருந்த பணப் பையைத் திருட முயன்றனா். சுதாரித்துக் கொண்ட சரவணன், சப்தமிட்டதால், பொதுமக்கள் 4 பெண்களையும் பிடித்து, மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் பிடிபட்டவா்கள், மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சோனம் (36), நேகா (35), சாவித்திரி பாய் (36), மோகினி பாய், (45) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் கைது செய்தனா்.

விசாரணையில் அவா்கள், ரயில் மூலம் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடுவது தெரிய வந்தது. இவா்களில் சோனம் மீது 8 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.