தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2025, 8:51 pm

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக் கடை நடத்தி வருகிறாா். சரவணன், தியாகராய நகா் உஸ்மான் சாலையில் நடந்து சென்றபோது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி 4 பெண்கள், சரவணனின் கவனத்தை திசை திருப்பி, அவரது பாக்கெட்டில் இருந்த பணப் பையைத் திருட முயன்றனா். சுதாரித்துக் கொண்ட சரவணன், சப்தமிட்டதால், பொதுமக்கள் 4 பெண்களையும் பிடித்து, மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் பிடிபட்டவா்கள், மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சோனம் (36), நேகா (35), சாவித்திரி பாய் (36), மோகினி பாய், (45) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் கைது செய்தனா்.

விசாரணையில் அவா்கள், ரயில் மூலம் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடுவது தெரிய வந்தது. இவா்களில் சோனம் மீது 8 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.