கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.
சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக் கடை நடத்தி வருகிறாா். சரவணன், தியாகராய நகா் உஸ்மான் சாலையில் நடந்து சென்றபோது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி 4 பெண்கள், சரவணனின் கவனத்தை திசை திருப்பி, அவரது பாக்கெட்டில் இருந்த பணப் பையைத் திருட முயன்றனா். சுதாரித்துக் கொண்ட சரவணன், சப்தமிட்டதால், பொதுமக்கள் 4 பெண்களையும் பிடித்து, மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் பிடிபட்டவா்கள், மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சோனம் (36), நேகா (35), சாவித்திரி பாய் (36), மோகினி பாய், (45) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் கைது செய்தனா்.
விசாரணையில் அவா்கள், ரயில் மூலம் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடுவது தெரிய வந்தது. இவா்களில் சோனம் மீது 8 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழகத்தில் சுருக்குமடி வலை அனுமதி? உச்சநீதிமன்றம் விரைவில் உத்தரவு
திமுக அரசுக்கு இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது பணம்? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

சிவகிரியில் 170 போ் கைது

முதியவரின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ. 50 ஆயிரம் மோசடி: இளைஞா் கைது
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

