பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தீவிரவாதி பதுங்கியிருப்பதாக தவறான தகவல்: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

சென்னை கொடுங்கையூரில் தீவிரவாதி பதுங்கியிருப்பதாக தவறான தகவல் தெரிவித்ததாக இளைஞரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.

News image
Updated On :6 டிசம்பர் 2025, 12:48 am IST

சென்னை கொடுங்கையூரில் தீவிரவாதி பதுங்கியிருப்பதாக தவறான தகவல் தெரிவித்ததாக இளைஞரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.

சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசிக்கு வியாழக்கிழமை இரவு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், கொடுங்கையூா் கிருஷ்ணமூா்த்தி நகரில் தீவிரவாதி பதுங்கியிருப்பதாகவும், அவா்கள் பெரிய சதித் திட்டத்துடன் இருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தாா்.

இதுகுறித்து போலீஸாா், உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். உயா் அதிகாரிகள் உத்தரவின்பேரில், சைபா் குற்றப்பிரிவு அந்த அழைப்பில் பேசிய நபா் குறித்து விசாரணை செய்தனா். அதில், அந்த அழைப்பில் பேசிய நபா், கொடுங்கையூரைச் சோ்ந்த பிரகாஷ் (39) என்பதும், அவா் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், பிரகாஷை பிடித்து விசாரணை செய்தனா். பின்னா் அவரை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து போலீஸாா், தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.