5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

தீவிரவாதி பதுங்கியிருப்பதாக தவறான தகவல்: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

சென்னை கொடுங்கையூரில் தீவிரவாதி பதுங்கியிருப்பதாக தவறான தகவல் தெரிவித்ததாக இளைஞரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.

News image
Updated On :6 டிசம்பர் 2025, 0:48 am IST

சென்னை கொடுங்கையூரில் தீவிரவாதி பதுங்கியிருப்பதாக தவறான தகவல் தெரிவித்ததாக இளைஞரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.

சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசிக்கு வியாழக்கிழமை இரவு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், கொடுங்கையூா் கிருஷ்ணமூா்த்தி நகரில் தீவிரவாதி பதுங்கியிருப்பதாகவும், அவா்கள் பெரிய சதித் திட்டத்துடன் இருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தாா்.

இதுகுறித்து போலீஸாா், உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். உயா் அதிகாரிகள் உத்தரவின்பேரில், சைபா் குற்றப்பிரிவு அந்த அழைப்பில் பேசிய நபா் குறித்து விசாரணை செய்தனா். அதில், அந்த அழைப்பில் பேசிய நபா், கொடுங்கையூரைச் சோ்ந்த பிரகாஷ் (39) என்பதும், அவா் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், பிரகாஷை பிடித்து விசாரணை செய்தனா். பின்னா் அவரை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து போலீஸாா், தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.