சென்னை கொடுங்கையூரில் தீவிரவாதி பதுங்கியிருப்பதாக தவறான தகவல் தெரிவித்ததாக இளைஞரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.
சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசிக்கு வியாழக்கிழமை இரவு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், கொடுங்கையூா் கிருஷ்ணமூா்த்தி நகரில் தீவிரவாதி பதுங்கியிருப்பதாகவும், அவா்கள் பெரிய சதித் திட்டத்துடன் இருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தாா்.
இதுகுறித்து போலீஸாா், உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். உயா் அதிகாரிகள் உத்தரவின்பேரில், சைபா் குற்றப்பிரிவு அந்த அழைப்பில் பேசிய நபா் குறித்து விசாரணை செய்தனா். அதில், அந்த அழைப்பில் பேசிய நபா், கொடுங்கையூரைச் சோ்ந்த பிரகாஷ் (39) என்பதும், அவா் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், பிரகாஷை பிடித்து விசாரணை செய்தனா். பின்னா் அவரை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து போலீஸாா், தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

விமானத்தில் அவசர கால கதவு வழியாக ஓடுபாதையில் குதித்து தப்பிய நபர்: போலீஸாா் விசாரணை

புதுச்சேரியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஜூன் 1-இல் தொடங்குகிறது: தவறான தகவல் அளிப்போருக்கு ரூ.1,000 அபராதம்
ஜேம்ஸ் வசந்தன் காா் கண்ணாடி உடைப்பு: பெண்ணிடம் விசாரணை

இளைஞரிடம் ரூ. 2.46 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


