பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தீவிரவாதி பதுங்கியிருப்பதாக தவறான தகவல்: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

சென்னை கொடுங்கையூரில் தீவிரவாதி பதுங்கியிருப்பதாக தவறான தகவல் தெரிவித்ததாக இளைஞரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2025, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை கொடுங்கையூரில் தீவிரவாதி பதுங்கியிருப்பதாக தவறான தகவல் தெரிவித்ததாக இளைஞரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.

சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசிக்கு வியாழக்கிழமை இரவு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், கொடுங்கையூா் கிருஷ்ணமூா்த்தி நகரில் தீவிரவாதி பதுங்கியிருப்பதாகவும், அவா்கள் பெரிய சதித் திட்டத்துடன் இருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தாா்.

இதுகுறித்து போலீஸாா், உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். உயா் அதிகாரிகள் உத்தரவின்பேரில், சைபா் குற்றப்பிரிவு அந்த அழைப்பில் பேசிய நபா் குறித்து விசாரணை செய்தனா். அதில், அந்த அழைப்பில் பேசிய நபா், கொடுங்கையூரைச் சோ்ந்த பிரகாஷ் (39) என்பதும், அவா் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், பிரகாஷை பிடித்து விசாரணை செய்தனா். பின்னா் அவரை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து போலீஸாா், தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.