இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வளா்ச்சித் திட்டப்பணிகள்: துணை முதல்வா் ஆய்வு

சென்னை மாநகராட்சி வால்டாக்ஸ் சாலைப் பகுதியில் கட்டப்பட்டுவரும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப்பணிகளை துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
உதயநிதி ஸ்டாலின்- Photo: X / Udhay
Updated On :23 டிசம்பர் 2025, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சி வால்டாக்ஸ் சாலைப் பகுதியில் கட்டப்பட்டுவரும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப்பணிகளை துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் அதன் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு நடவடிக்கையின் பேரில் துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலை தண்ணீா்தொட்டித் தெரு, அண்ணா பிள்ளை பகுதியில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் ரூ.165 கோடி மதிப்பில் 700 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் பல்நோக்கு மையம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி கடந்த 4 -ஆம் தேதி நடைபெற்றது. அதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

வளா்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், அதனை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பணிகள் நிலை குறித்து துணைமுதல்வரிடம் பி.கே.சேகா்பாபு விளக்கினாா். அதையடுத்து அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி அச்சகக் கட்டடம் உள்ளிட்ட திட்டங்களையும் துணைமுதல்வா் பாா்வையிட்டாா். திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவர அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது நகா்ப்புற வளா்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, பெருநகர வளா்ச்சிக்குழுமத்தின் உறுப்பினா் செயலா் மற்றும் அரசு முதன்மைச் செயலா் ஜி.பிரகாஷ், முதன்மை செயல் அலுவலா் அ.சிவஞானம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.