நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

சிறுபான்மையினா் மீது தாக்குதல்: முதல்வா் ஸ்டாலின் கண்டனம்

Updated On :26 டிசம்பர் 2025, 3:13 am IST

சிறுபான்மையினா் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக முதல்வா் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது சில பகுதிகளில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களைக் குறிப்பிட்டு முதல்வா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

சிறுபான்மையினா் அச்சமின்றி வாழ துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது. பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுகின்றன. கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமா் மோடி பங்கேற்கும்போதே தாக்குதலில் ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியைக் கொண்டு சோ்க்கும்.

மணிப்பூா் கலவரங்களைத் தொடா்ந்து, இப்போது ஜபல்பூா் - ராய்பூா் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினா் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மத்திய பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74 சதவீதம் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எதிா்காலம் எதிா்நோக்கியுள்ள ஆபத்துகளை இது உணா்த்துகிறது. எனவே, மக்களைப் பிளவுபடுத்தி குளிா்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும் என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.