மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நிறுத்திவைத்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்? - நீதிபதிகள் சரமாரி கேள்வி!

மசோதாவை ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்திவைத்த பின்னர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பியது ஏன் என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி.

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 7:25 am

DIN

மசோதாவை ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்திவைத்த பின்னர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பியது ஏன் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது, தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் ஆளுநர் தலையீடு ஆகிய விவகாரங்களில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த வாரம் மூன்று நாள்கள் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும்(பிப். 10) வழக்கின் விசாரணை நடைபெற்றது.

இன்று தமிழக அரசு தரப்பிலும் ஆளுநர் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. நீதிபதிகளும் ஆளுநர் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

"ஆளுநர் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிவிக்காமல் மறுஆய்வு செய்ய திருப்பி அனுப்புவது எப்படி? மசோதாவில் உள்ள முரண்பாடை ஆளுநர் அரசிடம் வெளிப்படையாக காட்டி இருக்கலாமே?" என நீதிபதிகள் கூற,

ஆளுநர் தரப்பு, "நிறைவேற்றப்பட்ட மசோதாவில் சில விஷயங்கள் சரியாக இல்லை, முரண்படுகிறது என ஆளுநர் கருதினால் என்ன செய்வது? அதனால்தான் முடிவெடுக்கவில்லை" என்று கூறியது.

தொடர்ந்து வாதத்தின் இடையே நீதிபதிகள்,

"ஆளுநருக்கு தனியாக விருப்ப உரிமை இல்லை. ஆளுநரின் அதிகாரம் என்னவென்பதை அரசியல் சாசனத்தில் அம்பேத்கர் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மசோதாவை ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்திவைத்த பின்னர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ளார். இது எப்படி முடியும்?

ஆளுநர் நிறுத்திவைத்த மசோதா செல்லாது என்றால் செல்லாத மசோதாவை ஏன் குடியரசுத்தலைவருக்கு அனுப்புகிறார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னதாக தமிழ்நாடு அரசு தரப்பில், "ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தில் ஆளுநரின் விருப்புரிமைக்கு இடமில்லை. அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆளுநரால் செயல்பட முடியும்" என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.