சென்னையில் நடத்தப்பட்ட சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
கடந்த 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த சென்னை சங்கமம் விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள கோபுரப் பூங்காவில் இன்று நடைபெற்ற சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் நேரில் கண்டு மகிழ்ந்தார்.
அப்போது மல்லர் கம்பம் ஏறி சாகசம் செய்த மாற்றுத்திறனாளிகளை முதல்வர் ஸ்டாலின் மேடையேறிச் சென்று பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு, ஆ.ராசா எம்.பி., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பொங்கல் திருநாளையொட்டி, தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நடைபெற்று வருகிறது.
நிகழாண்டு விழாவை கீழ்ப்பாக்கம் பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதா் ஆலயத் திடலில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முழவுக் கருவியை இசைத்து தொடங்கிவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”தவெக 3 மாதங்களாவது தாண்டுமா?” முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின்

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பிரதமரின் மனதில் குரல் நிகழ்ச்சி

அரியலூரில் தமிழா் கலை இலக்கிய பண்பாட்டு திருவிழா
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



