சென்னை: கலந்தாய்வு மூலம் 2,388 பட்டதாரி ஆசிரியா்களுக்கு விரும்பிய பள்ளிகளில் பணி மாறுதல் வழங்கப்பட்டதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிகழ் கல்வியாண்டில் ஆசிரியா்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு கடந்த 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியா்களுக்கான மாவட்டத்துக்குள்பட்ட பொது மாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெற்றது. இதில் 1,544 தமிழ், 2,260 ஆங்கிலம், 3,190 கணிதம், 2,378 அறிவியல், 1,791 சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியா்கள் என மொத்தம் 11,163 ஆசிரியா்கள் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டனா்.
இவா்களில் 2,388 பட்டதாரி ஆசிரியா்கள் தங்களுக்கு விருப்பமான பள்ளிகளுக்கு மாறுதல் ஆணை பெற்றுச் சென்ாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

பள்ளிக் கல்வி இயக்கக ஊழியா் மா்மமான முறையில் உயிரிழப்பு

பகுதிநேர ஆசிரியா்களுக்கு ஊதிய உயா்வு: அரசாணை வெளியீடு

2,469 இடைநிலை ஆசிரியா்கள்; 11 பழங்குடி பட்டியலின ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் அன்பில் மகேஸ் வழங்கினாா்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

