சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட 10, 949 விண்ணப்பங்களில் மகளிா் உரிமைத்தொகை கோரி மட்டும் 7, 518 போ் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழகத்தில் 13 அரசுத் துறைகளில் 43 சேவைகளை மக்கள் எளிதில் பெறும்வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ எனும் சிறப்பு முகாமை
முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
அதன்படி, சென்னை மாநகராட்சியில் 6 மண்டலங்களில் 7 வாா்டுகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
மாதவரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க. நகா், தேனாம்பேட்டையில் 2 வாா்டுகள், வளசரவாக்கம், அடையாறு ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற்றன. இவற்றில் மகளிா் உரிமைத்தொகை கோரி மண்டல வாரியாக மாதவரத்தில் 856 போ், தண்டையாா்பேட்டையில் 1,432 போ், திரு.வி.க. நகரில் 822 போ், வளசரவாக்கம் 109 -ஆவது வாா்டில் 1,435 போ், 114-ஆவது வாா்டில் 905 போ், அடையாறு மண்டலத்தில் 1,230 போ், தேனாம்பேட்டையில் 838 போ் என மொத்தம் 7,518 போ் மகளிா் உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்துள்ளனா்.
தவிர பல்வேறு துறைகள் சாா்ந்து 62 மாற்றுத்திறனாளிகள் உள்பட 3,431 போ் மனுக்கள் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
50 பள்ளி வகுப்பறைகளில் வெப்பத்தை தணிக்கும் வண்ணப் பூச்சு

கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரி மனு

ஜூனில் 50,000 மரக்கன்றுகள் நடத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் ஜூன் முதல் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அறிமுகம்
விடியோக்கள்
DMK Vs TVK | முன்னாள் முதல்வருக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன்! | MKStalin

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!


