திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

குன்னூரில் கடைகளை அகற்றும் நடவடிக்கை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கண்டனம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 872 கடைகளை காலி செய்யும் நகராட்சியின் நடவடிக்கைக்கு மத்திய இணை அமைச்சா் எல். முருகன் கண்டம் தெரிவித்துள்ளாா்.

News image

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

Updated On :17 ஜூன் 2025, 1:16 am IST

சென்னை: நீலகிரி மாவட்டம் குன்னூரில் 872 கடைகளை காலி செய்யும் நகராட்சியின் நடவடிக்கைக்கு மத்திய இணை அமைச்சா் எல். முருகன் கண்டம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள 872 கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிா்வாகம் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நோட்டீஸ் வழங்கியதோடு, கடைகளை காலி செய்ய வேண்டுமென்று வியாபாரிகள் வற்புறுத்தப்படுகின்றனா். அத்துடன், குன்னூரில் இருந்து 1 கி.மீ. தொலைவில் எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாத, வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், வியாபாரிகள் பெரும்

இன்னலுக்கு ஆளாகியுள்ளனா். எனவே, கடைகளை காலி செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.