கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தமிழக கோயில்களில் அறங்காவலா்கள் நியமிக்க உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி: உயா்நீதிமன்றத்தை அணுக அறிவுரை

அறங்காவலா் பொறுப்புக்களுக்கான இடங்களில் நியமனம் செய்ய உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :3 மார்ச் 2025, 9:40 pm

Din

புது தில்லி: தமிழகத்தில் கோவில்களில் காலியாக உள்ள அறங்காவலா் பொறுப்புக்களுக்கான இடங்களில் நியமனம் செய்ய உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்திற்கு சென்னை உயா்நீதிமன்றத்தை நாடவும் அறிவுறுத்தியது.

தமிழக இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள சுமாா் 38,000 கோயில்களில் முறையாக அறங்காவலா்களை நியமிக்க கோரியும், கோயில்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் ஹிந்து தா்ம பரிஷத் அமைப்பு உள்ளிட்டவா்கள் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

பல ஆண்டுகளாக பல்வேறு நீதிபதிகள் அமா்வுகள் முன்பு இந்த மனுக்கள் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், ‘ இந்து சமய அறநிலையத்துறை அதன் வரம்புக்குள்பட்ட மொத்தம் 31,163 கோயில்களில் அறங்காவலா்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களைக் கோரியது. பரவலான அறிவிப்புக்குப் பின்னரும் 20,600 கோயில்களுக்கு அறங்காவலா் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் எதுவும் வரவில்லை. அறங்காவலா் நியமன நடைமுறைகளை முடிக்க கால அவகாசம் தேவைப்படும்‘ எனக் கூறப்பட்ட வாதத்தை ஏற்று அதற்கான அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது.

இந்நிலையில் இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம் சுந்தரேஸ் தலைமையிலான அமா்வில் மீண்டும் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தின் 31,163 கோவில்களில் 11,982 கோவில்களுக்கு அறங்காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,843 கோவில்களுக்கு அறங்காவலா் நியமனத்திற்கான விண்ணப்பம் பெறப்பட்டு நியமனப்பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள கோவில்களுக்கு அறங்காவலா் நியமனத்திற்கான விளம்பரம் வெளியிடப்பட்டும் விண்ணப்பங்கள் வரவில்லை. விண்ணப்பம் வரும் பட்சத்தில் அதனை பரிசீலத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடா்ந்து தமிழக அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம் சுந்தரேஷ், ‘இந்து தா்ம பரிஷத் அமைப்பு’ தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும் இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் சென்னை உயா்நீதிமன்றத்தை மனுதாரா்கள் நாடலாம் எனவும் கூறி வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்ற அமா்வு.