பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு வேண்டாம்: அமித் ஷாவுக்கு அன்பில் மகேஸ் பதில்

சம்ஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு வேண்டாம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறினாா்.

News image

அமைச்சர் அன்பில் மகேஸ் (கோப்புப்படம்) - ENS

Updated On :6 மே 2025, 2:54 am IST

சென்னை: சம்ஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு வேண்டாம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறினாா்.

தில்லியில் 1,008 சம்ஸ்கிருத உரையாடல் அமா்வுகளின் நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கலந்து கொண்டு பேசியபோது, சம்ஸ்கிருத மொழியை ஊக்குவிப்பது அதன் மறுமலா்ச்சிக்கானது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கானது என்றும், மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை சம்ஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது என்று தெரிவித்தாா்.

மத்திய அமைச்சா் அமித் ஷாவின் பேச்சுக்கு பதிலளித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை சம்ஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது எனப் பேசியுள்ளாா் மத்திய அமைச்சா் அமித் ஷா.

இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம். வா்ணாசிரமத்தை உயா்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என்கிறோம். ஹிந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சம்ஸ்கிருதத்தை அனுப்புவதுதான் தேசிய கல்விக் கொள்கை என அதில் தெரிவித்துள்ளாா்.