திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அமித் ஷா அழைக்காதது வருத்தமே: ஓபிஎஸ்

மத்திய அமைச்சர் அமித் ஷா அழைக்காதது குறித்து ஓபிஎஸ் பேச்சு...

News image

ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு.

Updated On :15 மே 2025, 5:23 pm IST

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தங்களை அழைக்காதது வருத்தமளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று((மே 15) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எங்களை அழைக்காதது வருத்தமே. நாங்கள் இதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறோம். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்களது நிலைபாட்டை தெரிவித்துவிட்டோம்.

மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து தேர்தல் கூட்டணிக் குறித்து விரைவில் அறிவிப்போம். கூட்டணி தொடர்பாக யாருடனும் மறைமுகமாக பேசவில்லை.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது தற்காலிகமானதே. தவெக தலைவர் விஜய் நல்ல இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களை இணைக்காமல் அதிமுக வெற்றிப் பெற முடியாது” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.