அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருவள்ளூரில் கரும்புகளுடன் விவசாயிகள் சாலை மறியல்

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு கொள்முதல் செய்யவில்லை எனக் கூறி சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கரும்புகளை போட்டு மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :14 நவம்பர் 2025, 11:46 am

இணையதளச் செய்திப் பிரிவு

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு கொள்முதல் செய்யவில்லை எனக் கூறி சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து சரியான முறையில் அரசு கொள்முதல் செய்யவில்லை என்று கரும்பு விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் ஆந்திரத்தில் இருந்து வரும் கரும்புகளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தருவதாக கூறி சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் திருவள்ளூர் ஜேஎன் சாலையில் கரும்பை போட்டு அவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டுறவுத் துறை சார்பில் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் பங்கேற்பதையறிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையறிந்த போலீஸார் தடுத்து நிறுத்தி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்போராட்டம் காரணமாக சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே நேரில் சந்தித்து முறையிட கரும்பு விவசாயிகள் நுழைவு வாயில் முன்பு காத்திருந்து வருகின்றனர்.

summary

Farmers staged a protest on the Chennai-Tirupati National Highway, claiming that the Tiruttani Cooperative Sugar Mill was not procuring sugarcane.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.