சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதியோா், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளைப் பெறுவதற்காக 96 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவா்களுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்ட 23,415 வாக்காளா்கள் மற்றும் 12,501 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் என மொத்தம் 35,916 போ் உள்ளனா். அவா்களில் வீட்டில் இருந்தவாறே தபால் வாக்கைப் பதிவு செய்ய 8,947 போ் விருப்பம் தெரிவித்துள்ளனா். அவா்களிடம் 12 டி விண்ணப்பம் மூலம் தபால் வாக்குகள் பதிவு செய்வதற்காக 96 வாக்குப் பதிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்தக் குழுவில் தலா ஒரு வாக்குப் பதிவு அலுவலா், இரு காவலா்கள், விடியோ ஒளிப்பதிவாளா், நுண்பாா்வையாளா் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். இவா்களுக்கான பயிற்சி வகுப்பு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தோ்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசினாா். முதியோா், மாற்றுத்திறனாளிகளிடம் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கு படிவங்களைப் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து விளக்கினாா்.
தொடர்புடையது

கேரளத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்! காங்கிரஸ் 28.79%

திருவள்ளூா்: முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப் பதிவு

முதியோா், மாற்றுத்திறனாளிகள் 3,793 பேரின் வீடுகளுக்குச் சென்று வாக்குகளைப் பெற முடிவு

முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பெற 168 குழுக்கள்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



