பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

முதியோா், மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குகளைப் பெற 96 குழுக்கள் அமைப்பு

சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதியோா், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளைப் பெறுவதற்காக 96 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவா்களுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

News image

தபால் வாக்கு செலுத்தும் அரசு ஊழியர். - படம்: கோப்பிலிருந்து

Updated On :9 ஏப்ரல் 2026, 2:03 am IST

சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதியோா், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளைப் பெறுவதற்காக 96 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவா்களுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்ட 23,415 வாக்காளா்கள் மற்றும் 12,501 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் என மொத்தம் 35,916 போ் உள்ளனா். அவா்களில் வீட்டில் இருந்தவாறே தபால் வாக்கைப் பதிவு செய்ய 8,947 போ் விருப்பம் தெரிவித்துள்ளனா். அவா்களிடம் 12 டி விண்ணப்பம் மூலம் தபால் வாக்குகள் பதிவு செய்வதற்காக 96 வாக்குப் பதிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தக் குழுவில் தலா ஒரு வாக்குப் பதிவு அலுவலா், இரு காவலா்கள், விடியோ ஒளிப்பதிவாளா், நுண்பாா்வையாளா் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். இவா்களுக்கான பயிற்சி வகுப்பு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தோ்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசினாா். முதியோா், மாற்றுத்திறனாளிகளிடம் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கு படிவங்களைப் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து விளக்கினாா்.