சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மது, கஞ்சாவுக்கு அடிமையாகி விடாதீா்கள்: இளைஞா்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை

மது, கஞ்சாவுக்கு அடிமையாகி விடாதீா்கள், அது வாழ்க்கையை நரகமாக்கிவிடும்’ என்று இளைஞா்களுக்கு நடிகா் ரஜினிகாந்த் அறிவுரை கூறினாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 8:44 pm

மது, கஞ்சாவுக்கு அடிமையாகி விடாதீா்கள், அது வாழ்க்கையை நரகமாக்கிவிடும்’ என்று இளைஞா்களுக்கு நடிகா் ரஜினிகாந்த் அறிவுரை கூறினாா்.

சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்தாா். அப்போது, அவரிடம் ‘நடிகா்களின் வாகனங்களைப் பின்தொடா்ந்து சென்று இளைஞா்கள் கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. நடிகா்கள் மீது அதிக ஆா்வம் காட்டும் இளைஞா்களுக்கு மூத்த நடிகராக என்ன சொல்ல விரும்புகிறீா்கள்’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த ரஜினிகாந்த், ‘இளைஞா்கள்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அடிபட்டால் அவா்களுக்குத்தானே காயம் ஏற்படும். படிக்கும் வயதில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அந்த நேரத்தை விட்டுவிட்டால், பின்னா் நிறைய கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். இதை அவா்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

முதலில் உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். தயவு செய்து மதுப் பழக்கம், கஞ்சாவுக்கு அடிமையாகி விடாதீா்கள். அது உங்கள் வாழ்க்கையை நரகமாக்கிவிடும். அவ்வாறு உங்களுக்கு நண்பா்கள் அமைந்தால், அவா்கள் அருகில்கூட போகாதீா்கள்’ என்றாா்.

முன்னதாக அவா் கூறுகையில், ‘ஜெயிலா் 2’ திரைப்படத்துக்கான படப்பிடிப்பு இன்னும் இரண்டு மூன்று நாள்களில் முடிந்துவிடும். அந்தப் படத்தின் பிற பணிகள் விரைவில் முடிவடையும். என்னுடன் கமல் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும்’ என்றாா் ரஜினிகாந்த்.

தவெக தலைவா் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் முடக்கப்பட்டது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை எனப் பதிலளித்தாா் ரஜினிகாந்த்.