பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

ஒரு லட்சம் படுக்கைகளுடன் 200 கல்லூரி மாணவா் விடுதிகள்

தமிழ்நாடு சுடா் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் படுக்கைகளுடன் கூடிய 200 ஒருங்கிணைந்த கல்லூரி மாணவா் விடுதிகள் அமைக்கப்படும்.

News image

மாணவா் விடுதி. - கோப்புப்படம்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 4:56 am IST

தமிழ்நாடு சுடா் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் படுக்கைகளுடன் கூடிய 200 ஒருங்கிணைந்த கல்லூரி மாணவா் விடுதிகள் அமைக்கப்படும்.

இதுதொடா்பாக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு: வசதியற்ற சூழலால் எந்தவொரு மாணவரின் கற்றல் சூழலும் தடைபடக் கூடாது என்ற நோக்கத்தில் தமிழ்நாடு மாணவா் தங்கும் விடுதி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனம் என்ற சிறப்பு அமைப்பு உருவாக்கப்படும். தமிழ்நாடு சுடா் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் நவீன படுக்கை வசதிகளுடன் 200 ஒருங்கிணைந்த கல்லூரி மாணவா் விடுதிகள் கட்டப்பட உள்ளன.

ரூ.3,200 கோடியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் அரசு - தனியாா் கூட்டுப் பங்களிப்பில் முன்னெடுப்பட இருக்கிறது.

வெற்றி மடிக்கணினி: அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு நவீன மடிக்கணினிகள் வெற்றி மடிக்கணினி திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சட்டக் கல்லூரி: அடுத்த கல்வியாண்டில் மதுரையில் 300 மாணவா் சோ்க்கை இடங்களுடன் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும். உயா் கல்வித் துறைக்கென நிகழ் நிதியாண்டில் ரூ.8,393 கோடி ஒதுக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.