FOLLOW US

ON GOOGLE DISCOVER

வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

வேளாண் பட்ஜெட்! வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்!

வேளாண் பட்ஜெட்டில் வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

News image

வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம் - DIPR

Updated On :6 ஆகஸ்ட் 2026, 1:54 pm IST

தமிழக வேளாண் பட்ஜெட்டில் வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தின் 2026 - 27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.

அதில், விவசாயிகள் எதிர்பார்க்காத பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. விவசாயிகளுக்கு பரிசு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அதில் சில குறிப்பிட்ட வேளாண் திட்டங்கள் அதிக கவனம் பெற்றுள்ளன. அதில், ஒன்றாக

வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம் அமைந்துள்ளது.

வாழை சாகுபடி செய்யும் மாவட்டங்களில், வாழைக் குலைகளின் எடை மற்றும் லேசான காற்றினால் வாழை மரங்கள் சாய்வதால் ஏற்படும் மகசூல் இழப்புகளைத் தவிர்க்க, வாழைக்கு முட்டுக்கொடுக்க நிதி உதவி வேண்டி விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், 2026-27 ஆம் ஆண்டில், 6 கோடியே 25 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 6,175 ஏக்கரில் வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

மேலும், சாமந்தி செடிகளுக்கு எல்இடி விளக்குகள் திட்டம் இடம்பெற்றுள்ளது.

சாமந்தி மலர் சாகுபடியில் பருவநிலை மாறும் காலங்களில் சூரிய ஒளி பெறும் கால அளவு (பகற்பொழுது/Photoperiod) மாறுபடுவதால் சாமந்தி உற்பத்தியும் அதற்கேற்ப மாறுபடுகிறது. இதனால் செடிகளின் வளர்ச்சி குறைந்து, சிறிய பூக்கள் சீரற்ற முறையில் விரிந்து, தரமும் மகசூலும் குறைவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.

இச்சவாலை எதிர்கொள்ளும் வகையில் சாமந்தி சாகுபடி செய்யும் விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க, பருவநிலை மாறுபடும் காலங்களில் தேவையான கூடுதல் ஒளியை ஏற்படுத்தி செடிகளின் வளர்ச்சியைத் தூண்டுவதன் வாயிலாக, பூக்கும் தருணத்தை சந்தைத் தேவைக்கேற்ப மாற்றுவதற்கு எல்.இ.டி (LED) விளக்குகள் அமைக்கும் திட்டம் நடப்பாண்டில் ஐந்து கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

பழ உறை, வாழை குலை உறை

பழ உறை மற்றும் வாழையில் குலை உறை பயன்படுத்துவதால் பூச்சி, நோய் தாக்குதல்கள், பறவைகள் அதிக வெப்பம், மழை ஆகியவற்றிலிருந்து பழங்கள் பாதுகாக்கப்பட்டு பழங்களின் தரமும் தோற்றமும் மேம்படுகின்றன.

கூடுதல் நன்மையாக, பூச்சிக்கொல்லி பயன்பாடு குறைவதுடன், சந்தை மதிப்பும் விவசாயிகளி வருமானமும் அதிகரிக்கின்றன. எனவே விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில், 2026-27 ஆம் ஆண்டில் 2500 ஏக்கரில் சாகுபடி செய்யப்படும் மா, கொய்யா போன் பழப் பயிர்களுக்கு பழ உறையும், வாழைக்கு குலை உறையும் 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதியில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Agriculture Budget! Scheme to provide support props for banana plants!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.