வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

பொள்ளாச்சி அருகே நண்பனைக் கொன்று செல்ஃபி எடுத்த ஜென் ஸீ-க்கள்!

பொள்ளாச்சி அருகே நண்பனைக் கொன்று செல்ஃபி எடுத்த இளைஞர்கள் பற்றி...

News image

பொள்ளாச்சி அருகே நண்பனைக் கொன்று செல்ஃபி எடுத்த ஜென் ஸீ-க்கள் - Dinamani

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:43 pm IST

பொள்ளாச்சி அருகே நண்பனை மதுபோதையில் அடித்துக் கொன்ற இளைஞர்கள், சடலத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே சிக்கலாம் பாளையம், உதயம் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணி. கட்டடத் தொழிலாளியான இவரது மகன் அஸ்வின் (வயது 22). இவர் புதன்கிழமை இரவு, அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் செல்வக்குமார் என்பவரின் மகன்களான தினேஷ் (16), மாதேஷ் (22) ஆகியோருடன், விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டுக்குச் சென்று மது அருந்தியுள்ளனர்.

அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அண்ணன் தம்பிகளான, தினேஷ் மற்றும் மாதேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து, அதிகாலை 1.45 மணிக்கு, அஸ்வினை சுத்தியால் தலையில் அடித்தும், கத்தியால் கழுத்து அறுத்தும் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

கொல்லப்பட்ட அஸ்வின்

கொல்லப்பட்ட அஸ்வின்

இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தனிப்படை அமைத்து, தலைமறைவான குற்றவாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர்.

மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபரை, சுத்தியால் அடித்து, கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ள சம்பவம், கிணத்துக்கடவு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Gen Z youths kill their own friend and take a selfie near Pollachi!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.