இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நில மோசடி: துணை ஆட்சியர் பணியிடை நீக்கம்!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நில மோசடி வழக்கில் துணை ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக...

News image

மதுரை மீனாட்சி அம்மன் கோயில். - கோப்புப்படம்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 5:39 pm IST

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ. 60 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட துணை ஆட்சியர் அன்பழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை துரைராணி என்பவர் ஓர் அறக்கட்டளையை நிறுவி, மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அசோகா விலாஸ் பங்களா, அதனுடன் இணைந்த தோட்டம் ஆகியவற்றை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், கள்ளழகா் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில் சேவைக்காக உயில் சாசனம் செய்தார்.

இந்த நிலத்தை முறைகேடாக தனிநபரின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து, அடமானப் பத்திரம் பதிவு செய்தது தொடர்பாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நிர்வாகம் சார்பில் மத்திய குற்றப் பிரிவில் அண்மையில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ராமாயி ஆயியார், செந்தமிழ்ச்செல்வி, பிரேமா, ராஜ்குமார், முத்துராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர் அரசன், நிலத்துக்கு பட்டா பெற்ற இளையராஜா, அனிஷ், கவிதா, பிரகாஷ், காளிக்குமார், சார்பதிவாளர்கள் அனந்தராமன், பிரசாந்த், சந்தானகருப்பன் ஆகிய 19 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இவர்களில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார், உசிலம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா, முன்னாள் வட்டாட்சியரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருமான அன்பழகன் ஆகிய 3 பேரை குற்றப் பிரிவு போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.

இதனிடையே, திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையைச் சேர்ந்த காளிக்குமார், வடமதுரை சாா்பதிவாளர் அலுவலகத்தில் இந்த நிலத்தை அடமானப் பத்திரம் பதிந்து மோசடி செய்தார். இதையடுத்து, காளிக்குமாரை மதுரை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நில மோசடி வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த வழக்கில் புதிய திருப்பமாக, துணை ஆட்சியர் தகுதியுடைய அன்பழகனை பணியிடை நீக்கம் செய்து வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Summary

Deputy Collector Anbalagan, who was arrested in connection with the fraudulent registration of land worth ₹60 crore belonging to the Madurai Meenakshi Amman Temple Trust, has been placed under suspension.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.