சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கோலாகலம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கோலாகலமாக இன்று நடைபெற்றது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா - DIN

Updated On :14 ஆகஸ்ட் 2026, 12:13 pm IST

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் இன்று காலை 8.45 மணிக்கு தேரோட்டம் வெகு விமரிசையாகத் தொடங்கியது. கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து நான்கு ரதவீதிகள் வழியாக தேர் இழுத்தனர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் வராக ஷேத்திரம் என அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் கருடாழ்வார் அம்சமான பெரியாழ்வார், பூதேவி அம்சமான ஆண்டாள் அவதரித்த சிறப்புக்குரியது. 196 அடி உயரம் உள்ள ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ராஜகோபுரம் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்குகிறது.

112 அடி உயரம் கொண்ட மகாபாரத, ராமாயண சிற்பங்கள் நிறைந்த கலைப் பெட்டகமான திருஆடிப்பூர தேர் தமிழகத்தில் இரண்டாவது பெரிய தேர் ஆகும். ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூர தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்ட திருவிழா ஆகஸ்ட் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முதல் நாள் விழாவில் 16 வண்டி சப்பரம், 4- ம் நாளில் கோவர்த்தன கிரி கிருஷ்ணர் அலங்காரம், 5-ம் நாளில் பெரியாழ்வார் மங்களாசாசனம் மற்றும் 5 கருட சேவை, 7-ம் நாள் விழாவில் சயன சேவை என தினசரி பல்வேறு உற்சவங்கள் நடைபெற்றது. 8-ம் நாள் விழாவான நேற்று இரவு ரெங்கமன்னார் தங்க குதிரை வாகனத்திலும், ஆண்டாள் பூப் பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இன்று காலை 5 மணிக்கு ஆண்டாள் ரெங்கமன்னார் ஏகாந்த திருமஞ்சனம் முடிந்து, சர்வ அலங்காரத்தில் ஆடிப்பூரத் தேரில் எழுந்தருளினர். அங்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், மதுரை அழகர் கோயில் சுந்தர்ராஜ பெருமாள் சீர்வரிசையாக அனுப்பி வைத்த பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப் பொருள்கள் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு அணிவிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி, கீர்த்தனா, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

கீழ ரதவீதியில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா, கோபாலா" கோஷம் முழங்க வடம் பிடித்து நான்கு ரதவீதிகள் வழியாக தேர் இழுத்தனர்.

இதில் எம்.எல்.ஏக்கள் கார்த்தி, செல்வம், சார் ஆட்சியர் முகமது இர்பான், அறநிலையத் துறை உதவி ஆணையர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்தனர்.

Summary

Grand celebration of the Aadi Pooram Chariot Festival at the Srivilliputhur Andal Temple

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.