டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

சூப்பர் மாற்றம் இதுதானா? பள்ளியில் மது அருந்தும் மாணவிகள்! வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி

சூப்பர் மாற்றம் இதுதானா? என்று கேட்டு பள்ளியில் மது அருந்தும் மாணவிகள் குறித்து வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

News image

வானதி சீனிவாசன் - ENS

Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:07 pm IST

பள்ளி வளாகத்திலேயே சீருடையில் மாணவிகள் சிலர் மது அருந்தும் விடியோவை இணைத்து, மதி வளர்க்கும் கூடங்களா? இல்லை மதுபானக்கூடங்களா? என்று பதிவிட்டு, பாஜக மூத்த தலைவர் வாசனதி ஸ்ரீனிவாசன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் இருவர் வகுப்பறை முன்பு மது அருந்தியாதாக் கூறப்படும் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த மாதமே இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில் தற்போது வீடியோ வெளியாகி பெற்றோர்களிடத்திலும் கல்வியாளர்களிடமும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் மதுரை விரகனூர் அரசு பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவரை ஆசிரியர்கள் முன்னிலையில் தாக்குவதும், தரக்குறைவாக பேசியதுமான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவமும் கல்வி துறையின் ஒட்டுமொத்த மாண்பையே சீர்குலைத்துள்ளது.

மாற்றம் தருவோம்.. மாற்றம் தருவோம் என்று மேடைக்கு மேடை முழங்கி அரியணை ஏறிய தவெக ஆட்சியின் சூப்பரான மாற்றம் இதுதானா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே..?

மாணவர்கள் வகுப்பறையில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதும், ஆயுதங்ளைக் கொண்டுவருவதும், ஒழுங்கீனமாக நடந்து கொள்வதும் பெருகி வருவது கவலை அளிக்கும் செயல்.

எத்தனையோ அரசுப் பள்ளி மாணவர்கள் பல துறைகளில் சாதித்து வரும் வேளையில் இது போன்ற விரும்பத் தகாத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது ஒட்டுமொத்த அரசு பள்ளிகளின் பெயரையே அவமதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

தவெக ஆட்சியில் பள்ளிகளில் என்றைக்கு ரீல்ஸ் மோகங்களும், சினிமா பாடல்களும் வளர ஆரம்பித்ததோ அன்றே அறநெறி வகுப்புகளும், கடும் கட்டுப்பாடுகளும் காற்றில் பறந்து விட்டது என்பது தான் உண்மை.

பள்ளிகளில் மாணவர்களுக்கு முதலில் போதிக்க வேண்டியது ஒழுக்கமும், கீழ்படிதலும் தான் என்பதை நினைவில் நிறுத்தி இனி இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு ஆசிரியர்கள் மாணவர்களின் நல்வழிப்படுத்துமாறு வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.