தமிழ்நாடு
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 19 - நேரலை!
இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
முதல்வர் விஜய்.
ஆதாரத்துடன் இருக்கிறது
திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பான ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.
பால் கொள்முதல் விலையை ரூ. 7 ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது என்றாலும் இது போதுமானது அல்ல. பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.7 ஆக உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் புதன்கிழமை காலை வெளிநடப்பு செய்தனர்.
முதல்வரின் மருத்துவ காப்பீடு: ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சம் ஆக உயர்வு!
முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சம் ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் இன்று (ஆக. 19) அறிவித்தார்.
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு!
தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டர் ரூ.38 லிருந்து ரூ. 41 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் விஜய் இன்று (ஆக. 19) அறிவித்தார்.
அனைத்து எம்.எல்.ஏக்களுக்கு வாகனம்!
அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் வாகனம் வழங்கப்படும்; வாகன ஓட்டுநர், எரிபொருள், வாகன பராமரிப்புக்கு மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும்: சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு
பன்னோக்கு மருத்துவமனை!
வட சென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும் வகையில், பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலக தரத்திலான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்: முதல்வர் விஜய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

4 ஆண்டுகளுக்குப் பின் பால் கொள்முதல் விலை உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு: கொள்முதல் விலையை உயர்த்தாமல் கோடை வெயிலை குறை கூறுவதா? - அன்புமணி கேள்வி

4 ஆண்டுகளாக கொள்முதல் விலையை உயா்த்தாத ஆவின்: பொருளாதார இழப்பால் பரிதவிக்கும் பால் உற்பத்தியாளா்கள்!
விடியோக்கள்

முதல்வர் விஜய் அடுக்கிய அறிவிப்புகள்! பேரவையில் பாராட்டு மழை! | TN Assembly | TVK | DMK







