FOLLOW US

ON GOOGLE DISCOVER

நேபாளத்தில் தமிழர்கள்: 4 அமைச்சர்கள் தில்லி செல்கின்றனர்!நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள்: ஐஏஎஸ் அதிகாரிகள் குழு நேபாளம் செல்ல முதல்வர் உத்தரவு!நேபாள பெரு வெள்ளம்: 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை!தேர்தல் வழக்குகள்! நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல்!ஈஷா மூலம் நேபாளம் சென்ற 80 பேர் மாயம்! ஜக்கி வாசுதேவ் கண்ணீர்!தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை வேண்டும்! முதல்வர் விஜய்க்கு பெ. சண்முகம் கடிதம்!தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலை? இன்றைய நிலவரம்!சீன நாள்காட்டியால்.. தமிழர்களின் நேபாள பயண திட்டம் மாறியதா? தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கெடு விதித்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! காரணம் என்ன?ஒருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடியது பேரவை! செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது: ஆதவ் அர்ஜுனாகுழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்ற‌ ஈரோடு தம்பதி! தொடர்புகொள்ள முடியாமல் உறவினர்கள் தவிப்பு!

நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்ற‌ ஈரோடு தம்பதியை தொடர்புகொள்ள முடியாமல் உறவினர்கள் தவிப்பு...

Erode couple on a spiritual tour to Nepal, they are unable to make contact

நேபாளம் சென்ற ஈரோடு தம்பதி நடராஜன் - கிருஷ்ணவேணி - DIN

Published On :27 ஆகஸ்ட் 2026, 1:57 pm IST

ஈரோடு: நேபாளத்திற்கு ஆன்மிக பயணம் சென்ற ஈரோட்டை சேர்ந்த தம்பதியைத் தொடர்புகொள்ள முடியாத உறவினர்கள் மத்திய, மாநில அரசுகள் இருவரையும் பத்திரமாக மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கனகபுரத்தைச் சேர்ந்த தம்பதியினர் நடராஜன் (67) மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி (56) ஆகியோர் கயிலாய மலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்வதற்காகக் கடந்த 14 -ம் தேதி ஈரோட்டிலிருந்து புறப்பட்டுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் உறவினர்களுடன் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை நடராஜன் - கிருஷ்ணவேணி தம்பதியர் தங்களது மகன் கவின்ராஜிடம் தொலைபேசியில் பேசியுள்ளனர். ஆனால் அதன் பிறகு நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அவர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மகனின் தொடர் முயற்சிகளுக்கும் பலன் கிடைக்காததால்,பெற்றாரின் நிலை குறித்துத் தெரியாமல் உறவினர்களும் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.

எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, நேபாளத்தில் சிக்கியுள்ள இருவரையும் பத்திரமாக மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Summary

Erode couple on a spiritual tour to Nepal, they are unable to make contact

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.